Tuesday, July 2, 2013

கீழக்கரை அருகே எஸ்டிபிஐ கொள்கை விளக்க பொதுக்கூட்டம் !


 
திருப்புல்லாணியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி யின் 5ம் ஆண்டு நிறுவன நாள் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
 
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். மாநில செயலர் ரத்தினம், பொதுச் செயலர் அப்துல்ஹமீது, மாவட்டத் தலைவர் நு�ர் ஜியாவுதீன், துணைத் தலைவர்கள் பைரோஸ்கான், சோமு, மாவட்ட அமைப் பாளர் கார்மேகம், நகர்த் தலைவர் பூமிநாதன், செய லர் செய்யது இபுராகிம், தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், செயலர் சேகு இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைத் தலைவர் குத்புதீன் வரவேற்றார்.
 
திருப்புல்லாணியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தாழ்வாக உள்ள மின் வயர்களை உயரமாக அமைக்க வேண் டும். போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுலா தலமான திருப்புல்லாணியில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண் டும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தொய்வின்றி வழங்க வேண்டும். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் தெப்பக்குளம் வளாக நுழைவு வாயில் சிறுவர் பூங்காவை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 
திருப்புல்லாணி நகர் தலைவர் முகமது ரபீக் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.