Monday, September 30, 2013

மாநில அளவிலான செஸ் போட்டிக்கு கீழக்கரை மாணவ,மாணவியர் உள்ளிட்ட 10 பேர் தேர்வு!


மாநில அளவில் தேர்வு பெற்ற இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி சாலோம் மற்றும் மாணவன் கோகுல் நாதன் பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டிசுடன்

தமிழ்நாடு அரசு தமிழ்மாநில செஸ் கழகம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் செஸ் கழகம் இணைந்து மாவட்ட அலவிளான செஸ்போட்டியை ராமநாதபுரம் சிஎஸ்ஐ பிஎட் கல்லூரியில் நடத்தியது. ராமநாதபரம், கீழக்கரை, எமனேஸ்வரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவிகள் உள்பட 136 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் ஒன்பது சுற்றுகள் நடந்தன. இறுதி சுற்றில் 110 மாணவ, மாணவிகளில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேனிலைப்பள்ளி சாலமன்

ரத்தினசேகரன்(49) முதல் பரிசு பெற்றார்.

கீழக்கரை சேதுபாண்டி(26) 2வது பரிசும், எமனேஸ்வரம் நாகராஜன்(24) 3வது பரிசும் பெற்றனர்.

மாநில அளலிலன போட்டிக்கு மேற்கண்ட 3 பேர் மற்றும் கீழக்கரை அப்துல்ரகுமான், பரமக்குடி சவுராஸ்டிரா பள்ளி சந்திரசேகர், ராமேஸ்வரம் கேந்திரியா வித்யாலயா பள்ளி ரோஹிந்த், ராமநாதபுரம் பாஸ்கரவேலு,

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேனிலைப்பள்ளி கோகுலநாதன், ராமேஸ்வரம் எஸ்பிஏ மகளிர் மேனிலைப்பள்ளி மரியஏஞ்சலின்தில்பா, கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேனிலைப்பள்ளி சலோம் ஆகிய 10 பேரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கைத்தறிதுறைத் அமைச்சர் சுந்தரராஜ் பரிசு வழங்கினார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் முனியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுவார்ட்ஸ் செஸ்அகாடமி தலைவர் பால்மாறன், செயலாளர் ராக்லாண்ட்மதுரம் செய்திருந்தனர்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாSeptember 30, 2013 at 6:53 PM

    உங்களை பயிற்று விக்கும் பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக சென்று வாருங்கள். வாகை சூடி வாருங்கள். நல் வாழ்த்துகள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.