Friday, September 13, 2013

கீழக்கரை மீன் கடை பகுதியில் மது விற்பனை! மூவர் கைது!


கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மீன் கடையில் நேற்று முன்தினம் திறந்தவெளியில் சிலர் மது வகைகளை விற்றனர்.
இது குறித்து சிலர் போலீசுக்கு தெரிவித்தனர்.


மது விற்ற கீழக்கிடாரம் முருகன், லட்சுமிபுரம் பன்னீர் செல்வம் ஆகியோரை எஸ்.ஐ.,கோட்டைச்சாமி கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். திருப்புல்லாணி அருகே கரிச்சான் குண்டு கிராமத்தில் மது விற்ற நாராயணன் என்பவரும் கைது செய்யப்பட்டார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.