Friday, September 6, 2013

கீழக்கரையில் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு! மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது



கீழக்கரை அஹமது தெரு பகுதியில்  வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சதக் என்பவரின் மகன் பைரோஸ் என்பவருக்கு சொந்தமான பைக்கிற்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது இதில் பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.அருகிலிருந்த வீட்டிற்கும் சிறிது சேதம் ஏற்பட்டது.

 மேலும் தீ பரவாமல் அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை அனைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் தீவைத்த நபர்களை தேடி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் கீழக்கரை புதுக்குடி பகுதியில் கடைக்கு தீவைக்கப்பட்டது.இச்சமபவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை.

கீழக்கரை மக்களிடம் தேவையற்ற  பீதியை கிளப்பி வரும் இது போன்ற சம்பவங்களைல் ஈடுபடுவோரை காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

1 comment:

  1. காவல் துறையினர் மூலம் மூக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமர பொருத்தி கண்காணிக்கலாம் , இதன் மூலம் சட்டம் விரோத மான செயல்களை தடுக்க முடியும் .

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.