Friday, September 27, 2013

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனுக்கு உதவ வேண்டுகோள் !

கீழக்கரை புது கிழக்கு தெருவைச் சேர்ந்த S.M.கபீர் (கீழக்கரை த. மு. மு. க ஆம்புலன்ஸ் முன்னாள் டிரைவர்) அவர்களின் சகோதரி மகன் ஷாரூக்கான் (வயது 16) என்கிற சிறுவன் கடந்த 08.09.2013 அன்று இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. மூலையில் ஏற்பட்டுள்ள இரத்தக் கசிவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் 09.09.2013 முதல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது வரை தலையில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. 

 
இன்னும் இரண்டு மாதங்கள் வரை தீவிர சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதே வேளையில் இலட்ச ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படுகிறது.  மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்தினரால், மேல் சிகிச்சைக்கு பொருளாதார வசதிகள் இன்றி பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 உயிருக்கு போராடும் இந்த சிறுவனை காப்பாற்றும் முகமாகவும், சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்துள்ள இந்த ஏழை குடும்பத்தினரை தேற்றும் விதமாகவும் கீழ் காணும் தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தகுந்த பொருளாதார உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஷாரூக்கான் 
வார்டு எண் : 5201, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை
மருத்துவ அடையாள அட்டை எண் : 634005

பொருளாதார உதவிகளை அனுப்பித் தர :

மாஜிதா பீவி
வங்கி கணக்கு எண் : 890656614  
இந்தியன் வங்கி கிளை 
இராமேஸ்வரம் 

தொடர்புக்கு :

முஹம்மது ஹுசைன் - 9710740559

 S.M.கபீர் - 887013902
 
 வெளியீடு: சாலிஹ் ஹுசைன் (கீழை இளையவன்)

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.