Tuesday, September 24, 2013

கீழக்கரையில் 2 கார்களுக்கு ஒரே நம்பர் பிளேட்! கார் பறிமுதல்!

கீழக்கரையில் இரண்டு கார்களுக்கு ஒரே பதிவு எண்ணை பயன்படுத்தியவர் கைது செய்யப்பட்டார். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கீழக்கரை காவல்துறை தரப்பில் வெளியான செய்தியில்

 கீழக்கரையை சேர்ந்த சம்சுதீன் மகன் ஹாஜா (45). இவர் 2 கார்கள் வைத்துள்ளார். 2 கார்களுக்கும் ஒரே எண்ணை பயன்படுத்தி வந்ததாக தெரியவந்தது..

இது குறித்து கீழக்கரை காவல் உதவி ஆய்வாளர் கோட்டைசாமி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக அவரை விசாரணை செய்த போது தான் வைத்திருக்கும் 2 கார்களுக்கும் ஒரே பதிவு எண் பயன்படுத்தியது தெரிய வந்தது. இது சம்மந்தமாக கீழக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹாஜாவை கைது செய்தனர்.

 காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.