Saturday, September 7, 2013

கீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை !

 
கீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை காரணத்தால் நோயாளிகள் அதிக நேரம் வரிசையில் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே இரண்டு பெண் டாக்டர்கள் உட்பட 6 டாக்டர்கள் பணியில் இருந்து வந்தனர். தற்போது மூன்று டாக்டர்கள் மட்டுமே இருப்பதால் பொது மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக் வேண்டிய சூழல் நிலவுகிறது.
 
கீழக்கரை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரங்களான மாயாகுளம், புல்லந்தை மற்றும் காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி உட்பட ஏராளமான கிராமங்களிலிருந்தும் வெளி நோயாளிகளாக 450 முதல் 500 பேர் வரை வந்து செல்கின்றனர்.
உள்நோயாளிகளாக 40 முதல் 60 பேர் தினமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் தொடர்ச்சியாக 2 ஆயிரத்து 600 பேர் சக்கரை நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதய நோயாளிகளாக 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
ஏற்கனவே சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் தனித்தனியே டாக்டர்கள் இருந்தனர். தற்போது குழந்தை மருத்துவர்கள் இருவரும் மற்றும் பொது மருத்துவர் ஒருவர் மட்டுமே இருக்கின்றனர். இதனால் சக்கரை மற்றும் இருதய நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே இருந்தது போல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து பொது நல சேவகர் ஹமீதுகான் கூறுகையில், ‘கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே அதிகளவில் டாக்டர்களை நியமித்தும், நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டும், தனியார் மருத்துவமனைக்கு ஈடாக மாற்றிவந்தனர். டாக்டர்களை வேறு இடத்திற்கு மாற்றியதால் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பொது மக்கள் குறிப்பாக சக்கரை மற்றும் இருதய நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மீண்டும் கூடுதல் டாக்டர்களை நியமித்து பொது மக்களின் சிரமத்தை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

1 comment:

  1. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.