Wednesday, September 25, 2013

தடகளம் மற்றும் நீச்சல் துறைகளில் சாதிக்க காத்திருக்கும் மாணவ சிறுவன்!


கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் ஜுபைர்கான் இவரது தந்தை கீழக்கரையை சேர்ந்த எஸ்.எஸ்.மீரான் ஆவார்.

இம்மாணவர் சமீபத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில்  ஜீனியர் பிரிவில் 100 மீட்டர் ஓட்ட்த்தில் முதலிடமும் ,200 மீட்டர் ஓட்ட்த்தில் முதலிடமும்.குண்டு எறிதலில் இரண்டாமிடமும் பெற்றார்…தற்போது நீச்சல் பயிற்சிகளில் இம்மாணவர் ஈடுபட்டு வருகிறார்.இச்சிறுவனுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.


இது குறித்து மாணவரது பெற்றோர் கூறியதாவது,

விளையாட்டு துறைகளில் மிகுந்த ஆர்வமுடையவன..தற்போது பள்ளி நிர்வாகம் அவனை உற்சாகப்படுத்துவதால் இன்னும் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றிகளை பெற்றுள்ளார்.மேலும் நீச்சல் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக நீச்சல் பயிற்சிகென்று கீழக்கரையில் பிரத்யோக பயிற்சி கூடங்கள் இல்லை..ஊருக்கு வெளியே சென்றுதான் நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது.இது குறித்து நமதூர் பிரமுகர்கள் அரசாங்கத்திடம் எடுத்துரைத்து ஏறபாடு செய்ய வேண்டும் என்றார்.

 

 

 

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.