Sunday, September 15, 2013

ரூ 54 லட்சத்தில் கழிப்பறை திட்டம்!அரசு நிதியை வீணடிப்பதாக துணை சேர்மன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் புகார்!

நகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன் 

திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை மாற்றும் திட்டத்தின் கீழ் 2013-2014 உள் கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டம்,மாநில பகிர்வு நிதி, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் தலா 15 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், "யுனிவர்சல் டிசைன்' கழிப்பறைகள் அமைக்க, இடங்களை தேர்வு செய்து மதிப்பீடு தயாரித்து அனுப்புமாறு, சென்னை நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவிட்டார். கீழக்கரையில் கீழக்கரையில் புதிய பஸ்ஸ்டாண்ட், பெத்தரி தெரு மற்றும் 21வது வார் டில் சுடுகாடுக்கு அருகிலள் உள்ளிட்ட ஆறு இடங்களில் கழிப்பறை அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. 9 லட்ச ரூபாய் நகராட்சி பொதுநிதியிலிருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது

 

இநிலையில் கீழக்கரை நகராட்சி பகுதியில் ஏற்கன வே கட்டப்பட்ட இலவச கழிப்பறைகள் பயன்பாடின்றி உள்ள நிலையில் மே லும் ரூ.54 லட்சம் செலவில் இலவச கழிப்பறைகள் கட்டுவதற்கு துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் எதி ர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து அவர்கள் கூறுகையில்

 ஜின்னா தெரு கழிப்பறை

கீழக்கரை நகராட்சியில் 12வது வார்டுக்கு உட்பட்ட ஜின்னா தெருவில் இலவச கழிப்பறை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.6 லட்சம் செலவில் மரா மத்து செய்யப்பட்ட இந்த கழிப்பறை கட்டிடம் பயன்படுத்தப்படாமல் இன்று வரை காட்சி பொருளாகவே உள்ளது.

 

 2வது வார்டுக்கு உட்பட்ட முத்துசாமிபுரத்தி லும் இலவச கழிப்பறை கட் டிடம் பயன்படுத்தப்படாமல்  உள்ளது. இந்த கழிப்பறை கட்டிடத்தை மராமத்து செய்ய நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு செய்து 3 மாதங்களுக்கு மேலாகியும், மராமத்து பணிகள் துவக்கப்படவில்லை.


புதிய பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே நவீன கட்டண கழிப்பறை உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் உள்ள பழைய இலவச கழிப்பறை கட்டிடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.


 
இந்நிலையில் இங்கு புதிதாக இலவச கழிப்பறை கட்டுவதற்கு பொதுநிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் டெண்டர் விடப் பட்டு, பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளது. 3வது வார்டு பெத்தரி தெருவில் நல்ல நிலையில் உள்ள இல வச கழிப்பறைகள், தற் போது ரூ.8 லட்சம் செல வில் தேவையின்றி மரா மத்து செய்யப்படுகின்றன

.

இதற்கு நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் ஜெயபிரகாஷ், சாகுல்ஹமீது, பாவா செய்யது கருணை, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் கூறுகையில்,

 ஏற்கெனவே உள்ள இலவச கழிப்பறைகள் காட்சி பொருளாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், மேலும் கழிப்பறைகள் கட்ட தேவை யில்லை என்று சென்னை நகராட்சிகள் நிர்வாக ஆணையாளர், மதுரை மண்டல இயக்குநர் மற்றும் கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.
 
நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை உள்ளது. இதனால் இங் குள்ள இலவச கழிப்பறை கள் பயனில்லாமல் உள் ளன. இந்நிலையில் இலவச கழிப்பறைகள் கட்ட மேலும் அரசு நிதியை வீணடிக்க கூடாது என்றார்.

 

 

 

1 comment:

  1. தவறுகள் ஆண் , பெண் இருபாலாரும் தான் செய்கிறார்கள் , இதில் ஆண் பெண் பாகுபாடு பார்பதற்கு அவசியம் இல்லை , ஆனால் ஒரு ஆண் கெட்டால் அது அவனோடு முடித்து விடும் , ஒரு பெண் கெட்டு போனால் அவள் குடுப்பதை பாழகிவிடும், அவளின் ஆண் பெண் குழந்தைகள் எப்படி ஒழுக்கம் உள்ளதாக வளரும் ? அது மட்டு இல்ல அவளின் குடுபதிருக்கு ஏழு தலைமுறைக்கு கெட்ட பெயர் ஆகும் , சமுதயதிற்க்கும் கெட்ட பெயர் ஆகும் , கெட்டு போன பெண் சமுதாயத்தில் மற்ற பெண்களைம் வழி கெடுப்பாள் , இது சமுதாயத்தில் கரையான் மாதிரி வளர்த்து வருகிறது ,
    பெண் குழந்தைகள் கெட்டு போவதற்கு அவர்களின் பெட்றோர்களின் வளர்ப்பு சரி இல்லாத காரணமே ஆகும் ,

    ஒரு சில குடுப்பதில் மனைவிமார்களின் தவறான நடவடிக்கைகளால் மனம் நொந்து ஆண் கெட்டு போய்விடுகிறான் , ஒரு பெண் கெட்டு போவதற்கு ஆண் காரணமோ இல்லையோ , ஆனால் ஒரு ஆண் கெட்டு போவதற்கு பெண் தான் முக்கிய காரணம்

    ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,
    ஜாமத்தை சேர்த்த அணைத்து தெருவிலும் தெருமக்களால் ஜமாஅத் தலைவர் போட்டிக்கு 45 முதல் 60 வயது வரை ஒரு நபர் தேர்ந்து எடுத்து , அணைத்து தெருக்களிலும் தேர்ந்து எடுக்க பட்ட நபர்களை குழுக்கள் முறைகள் நான்கு நபர்களை தேர்ந்து எடுத்து இதில் ஒருவரை மக்களின் ஓட்டு முறைகள் படி ஒரு நபரை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் , இதன் மூலம் ஒரு ஜமாத்தில் வேறு பாடு இன்றி அணைத்து தெரு நபர்கள் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் ,

    பெண்களே உங்கள் ஜாமத்தை நோக்கி செல்லுகள் உரிமைகளை கேளுகள் ,அழ வேண்டாம் , கண்ணீர் சிந்த வேண்டாம், கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் , இறைவனுக்கு பயந்து தனது கற்பை மட்டும் பேணி பாதுகாத்து கொள்ளவேண்டு, ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,ஜமாத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களும் பங்குபெற வேண்டும் , பெண்களுக்கும் முவுகள் தீர்மானம்கள் எடுப்பதில் பங்கு பெற வாய்ப்புகள் (உரிமைகள் ) கொடுக்க பட வேண்டும் , இதன் மூலம் பெண்கள் சமுகத்தில் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் ,
    பல பெண்கள் குடிகாரன் கணவனாலும் , வேலைக்கு செல்லாத கணவனாலும் , போதிய வருமானம் இன்றி அல்லல் படுகிறார்கள் , ஜாமத்தில் தற்போது சரியான கூட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள் புறகணிக்க படுகிறார்கள் , குடும்ப வழக்குகள் மலைகள் போன்று எல்லா ஜமாத்திலும் குவிந்து கிடக்கிறது தீர்ப்பு வழங்காமல் ,

    கீழகரைல் அணைத்து பெண்கள் சேர்ந்து கீழக்கரை பெண்கள் நலன் அமைப்பு ஏற்படுத்தலாம் , இதன் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்மூலம் குழந்தைகளை பெற்றும் குடும்பத்தை கவனிக்காமல் மது சூது விபசாரம் என்று திரியும் திமிர் பிடித்த ஆண்கள் எல்லாரையும் சூலுக்கு எடுக்க வேண்டும் ,
    பெண்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை இந்த அமைப்பு மூலம் உரிமை குரல் கொடுத்து , உரிமைகளை பெற்று கொள்ளலாம் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.