Friday, September 27, 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்30ல் அரசு விடுமுறை!கலெக்டர் அறிவிப்பு!

ஏர்வாடி தர்ஹாவில் இம்மாதம் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின் போது எடுத்த படம்

கலெக்டர் நந்தகுமார்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் கொடியேற்றப்பட்டு  சந்தனக்கூடு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள்  மாதம் முழுவதும் நடைபெறும்..ஏராளமான மக்கள் பங்கேற்பார்கள் குறிப்பாக கேரளாவை சேர்ந்தோர் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.
இநிலையில் இவ்வருடமும் ஏர்வாடியில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் செப்.30ல் மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா செப்.30ல் நடைபெறுகிறது. இதனையொட்டி அன்று திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டும் பொருட்டு அக்.5 சனிக்கிழமை பணிநாளாக கருதி, அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் செயல்படும்.

மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் அனைத்து அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செப்.30ல் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.