Saturday, September 21, 2013

கீழக்கரை 500 பிளாட் பகுதியில் ரேசன் கடை! எம்.எல்.ஏவிடம் கோரிக்கை மனு!

தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட கீழக்கரை 500 பிளாட் பகுதியில் பொதுமக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம்  பெறப்பட்டது.

500 பிளாட் பகுதியில் நீண்ட காலமாக ரேசன் கடை அமைப்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எம்.எல்.ஏவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க 500- பிளாட் கிளை தலைவர் இபுறாகிம்,  செயலாளர் ரஹிம், பொருளாலர் செய்யது அலி, மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகுதாவுது சாதிக், கிளை நிர்வாகிகள் உள்ள்ட்ட பல கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.