Saturday, September 21, 2013

கீழக்கரையில் துப்புரவு தொழிலாளர் சங்க கூட்டம் !


காங்கிரஸ் நகர் தலைவர் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்க கவுரவ தலைவர்  ஹமீதுகான்,
தமிழ் நாடு துப்புரவு தொழிலாளர்கள் சங்க கீழக்கரை கிளை கூட்டம் முத்துசாமிபுரம் காலனியில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.

 கவுரவ தலைவர் ஹமீதுகான், சட்ட ஆலோசகர் செல்வ ராஜ், துணைத்தலைவர் மா ணிக்கம், துணை செயலா ளர் நாகராஜ், பொருளாளர் வேலுசாமி முன்னிலை வகி த்தனர். துணை பொருளா ளர் முத்து வரவேற்றார்.
கீழக்கரை நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களு க்கு அரசு சலுகைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இவற் றை பெறுவதற்கு அனை வரும் ஒற்றுமையுடன் செ யல்பட வேண்டும், துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக பேசும் துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மற்றும் பணி மேற்பார்வையாளர்களை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்க செயலாளர் கருங்கன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.