Saturday, September 21, 2013

கீழக்கரை அருகே இலவச கண்பரிசோதனை முகாம்


கீழக்கரை அருகே உள்ள புதுமாயாகுள த்தில் இலவச கண் பரிசோ தனை முகாம் நடந்தது.
மாவட்ட பார்வை இழ ப்பு தடுப்புச் சங்கம், ராமேஸ்வரம் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, மாயா குளம் ஊராட்சி மற்றும் கீழ க்கரை சமூகநல நுகர்வோர் சேவை இயக்கம் சார்பில் நடந்த இந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் சுந்த ராஜன் தலைமை வகித்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜா, எஸ்.ஐ மகேஸ் வரி, சமூகநல நுகர்வோர் சேவை இயக்கம் தலைவர் அமானுல்லா, செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன், செல்லச்சாமி, மாயாண்டி முன்னிலை வகித்தனர்.
முகாமில் 140க்கும் மேற்பட்டோருக்கு டாக்டர் ராமரத்தினம் மற்றும் உதவியாளர்கள் சண்முகப்பிரியா, செந்தில்குமார் ஆகியோர் கண் பரிசோதனை செய்த னர். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.