Sunday, September 15, 2013

கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய மூதாட்டி உடல்!போலீஸ் விசாரணை!

 
கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி தனலெட்சுமி(65). நேற்று இவரது உடல் கீழக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கியது.இவரது கணவர் 25 ஆணடுகளுக்கு முன்னர் இவரை பிரிந்து வேறு ஒரு பெண்னை திருமணம் செய்து தேவகோட்டையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். இது குறித்து மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தனலெட்சுமியின் சாவு குறித்து மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.