Tuesday, September 3, 2013

உயிரழந்த நிலையில் கரை ஒதுங்கியது டால்பின்!

கீழக்கரை கடற்கரை பகுதியில் நேற்று டால்பின் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. 4 அடி நீளம்  கொண்ட இந்த டால்பின் பாறையில்,கப்பல் அடிப்பகுதியில் மோதி காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பெரிய மீன்கள் தாக்கி இறந்திருக்கலாம்ம என்று தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை வனச்சரகர் ஜெயராமன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். கால்நடை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின் டால்பின் புதைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.