Wednesday, September 14, 2011

கீழக்கரை மலேரியா மையத்தில் ரத்த பரிசோதனைக்கு மறுப்பு! பொதுமக்கள் ஆவேசம் !

கீழக்கரை மலேரியா மையத்தில் இன்று காலை தெற்கு தெருவை சேர்ந்த ஜாஹிர் ஹுசைன் மகன் முகமது முஸ்தகீம்(16) +1 படித்து வருகிறான் மற்றும் சிக்கல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (19),புது மாயாகுளம் சமுத்திரபாண்டியன் மகன் வினோத்குமார்(16), ஆகியோருக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.இவர்கள் அனைவரும் இன்று காலை கீழக்கரை மலேரியா மையத்தில் மையத்தில் ரத்த பரிசோதனை செய்வதற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ரத்த பரிசோதகர் கனேசமூர்த்தி ஒரு நாளைக்கு 60 பேருக்கு மேல் பரிசோதனை செய்ய முடியாது ஏற்கெனவே 68 பேருக்கு சோதனை செய்து விட்டேன் அதனால் இன்று பரிசோதனை செய்ய முடியாது நாளை வாருங்கள் என்றார்.நீண்ட தூரத்தில் இருந்து வருகிறோம் நோயாளிகளுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது சோதனை செய்யுங்கள் எடுத்து கூறியும் கேட்பதாக இல்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து உயர் அதிகாரி உமா மகேஸ்வரியை தொடர்பு கொண்டு புகார் செய்த பிறகு அவர் உத்தரவின் பேரில் தொடர்ந்து ரத்த பரிசோதனை செய்துள்ளார்.

சமக நகர் செயலாளர் பந்தே நவாஸ் கூறியதாவது,
இனிமேலாவது மருத்துவதுறையில் உள்ள இவரை போன்றவர்கள் பணியை சிறப்பாக செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.