Sunday, January 22, 2012

பொதுமக்கள் புகார் எதிரொலி ! மீண்டும் அமைக்க‌ப்ப‌டும் சாலை !


மீண்டும் அமைக்கப்படும் சாலை

சோதனையிடும் கமிஷனர்



தரமற்ற சாலை
திமுக‌ ஆட்சி கால‌த்தில் சிற‌ப்பு சாலைக‌ள் திட்ட‌த்தில் நிதி ஒதுக்க‌ப்பட்டிருந்த நிலையின் தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் மூலம் முந்தைய திட்டமான‌ சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த சாலைகள் அவசர கோலத்தில் அள்ளி தெளித்த கோலம் போன்று தரமற்ற சாலைகளாக இருப்பதாக நம் கீழக்கரை டைம்ஸ் வலைதளம் ,தினகரன் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
முந்தைய செய்தி :-
http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_03.html

இதனையடுத்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா வலியுறுத்தலின் பேரில் கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை சோதனையிட்டதின் பேரில் மீண்டும் சீராக சாலையை அமைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடற்கரை பாலம் அருகில் போடப்பட்ட சாலை மீண்டும் சீர்படுத்தபட்டு அமைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.