
கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்
கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் வள்ளல் சீதக்காதி சாலையில் ஹைதர் அலி,சண்முக சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான கட்டிடத்தில் எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தார்.இவரை கட்டிடத்தை காலி செய்ய சொன்னார்களாம்.இவர் காலி செய்யாததால் ஆத்திரமடைந்து ஜேசிபி மூலம் கடையை இடித்ததாக சுப்ரமணியன் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார் .மேலும் புகார் மனுவில், இடித்த போது கடையில் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மூர்த்தி,சண்முக சுந்தரம், இவரது மகன் முருக பூபதி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.ஐ கனேசன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனடியாக மூர்த்தி என்பவரை கைது செய்தனர். மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அமைதிக்கு பெயர் போன கீழக்கரையில் ரவுடியிசமா????
ReplyDelete