Thursday, January 26, 2012

சைக்கிளில் இந்தியாவை சுற்றும் வெளிநாட்டு தம்பதியினர் கீழக்கரை வருகை !


இந்தியா முழுவது சைக்கிளில் சுற்றி வரும் 58 வயதான நியுசிலாந்தை சேர்ந்த கணவன்,மனைவி நேற்று கீழக்கரை வந்தனர்.

நியுசிலாந்தில் பிறந்து லண்டனில் வசித்து வரும் ராபர்(58),மேரிமொரிசன் தம்பதியினர் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி கோவாவிலிருந்து சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.இவர்கள் நேற்று கீழக்கரை வந்தனர்.நேற்று வரை இவர்கள் இந்தியா முழுவதும் சுமார் 2000த்துக்கு அதிகமான கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் கூறுகையில் ,
2000ம் ஆண்டிலிருந்து இதுவரை 85 நாடுகளுக்கு சென்றுள்ளோம்.மற்ற நாடுகளை விட இந்திய மக்களின் நடைமுறை பழக்க வழக்கங்கள் எங்களை கவர்ந்துள்ளது.நாங்கள் செல்லும் கிராமங்களில் எல்லா மக்கள் அன்புடன் வரவேற்பு தருகின்றனர்.அவர்களுடன் பழகுவதன் மூலம் பல் வேறு கலாச்சாரங்களை நாங்கள் அறிய முடிகிறது. இந்திய உணவு வகைகள் மிகவும் பிடித்துள்ளது. நாளொன்றுக்கு 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் செல்கிறோம்.நாளை பாண்டிச்சேரி செல்வதற்கு முடிவு செய்துள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.