Thursday, January 26, 2012

ஆயிர‌க்கணக்கானோர் கலந்து கொண்ட‌ மத நல்லிணக்க பேரணி !



ஆயிர‌க்கணக்கானோர் கலந்து கொண்ட‌ மத நல்லிணக்க பேரணி !

ஏர்வாடியில் ராமநாதபுரம் நேரு கேந்திரா மற்றும் சதக் கல்லூரி ,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் தினம் மற்றும் மத நல்லிணக்க பேரணியை கலெக்டர் அருண்ராய் தொடங்கி வைத்தார்.


இப்பேரணியில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி,ஒருங்கினைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ்,ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது அலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலாடி வட்ட வழங்கல் தாசில்தார் சேகர் ,மற்றும் அதிகாரிகள் ,ஆந்திர,கர்நாடக,மகாரஸ்ட்ரா,குஜராத்,உத்தரபிரேதேசம்,மாநில இளைஞர்கள் மற்றும் முகம்மது சதக் கல்லூரிகளின் மாணவ,மாணவிகள் 1000த்துக்கு மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டு மக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்த‌
பதாகைகளை ஏந்தி சென்றனர்.

ஏர்வாடியிலிருந்து புறப்பட்ட பேரணி ஏர்வாடி தர்ஹாவில் முடிவுற்று, அங்கு உலக அமைதிக்காகவும் ,மத நல்லிணக்கத்திற்காகவும் இஸ்மாயில் ஆலிம் துஆ ஓதினார்.இதில் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.