Sunday, January 15, 2012

பெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை !ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தல் !


பெரியபட்டிணத்தில் சுமார் 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் ஊரில் காவல் நிலையம் கிடையாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி காவல் நிலையத்திற்கு சென்று தான் புகார் செய்ய வேண்டும் எனவே பெரிய பட்டிணத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பெரியபட்டிண ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, பெரியபட்டிணத்தை சுற்றி ரெகுநாதபுரம், முத்துபேட்டை,வண்ணாங்குணடு ,வலசை,காரான்,குத்துக்கல்வலசை கிராமங்களும் உள்ளது இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் திருப்புலாணி காவல் நிலையம் சென்றுதான் புகார் செய்ய வேண்டும். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.ஆகவே பெரிய பட்டிணத்தில் காவல் நிலையம் அமைத்தால் சுற்றியுள்ள அனைத்து ஊர்களும் பயன் பெறும் என்றார்.இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி மற்றும் கலெக்டருக்கு மனு கொடுக்க உள்ளேன் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.