Tuesday, January 24, 2012

10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலதிட்ட உதவிகள் !





கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் சார்பில் நலிவுற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு சேவை இயக்க தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அவை முன்னவர் செய்யது இபுராகிம் முன்னிலை வகித்தார்.


கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் தங்கவேலன், கலங்கரை விளக்கம் பொறியாளர் குமார்ராஜா, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், தொழிலதிபர் முகம்மது முகைதீன், சிறு தொழில் மீனவர் சங்க செயலாளர் அட்டப்பா நல்ல இபுராகிம், மற்றும் பத்மநாபன், தங்கமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 10க்கும் மேற்பட்ட நலிவுற்ற பெண்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கவிஞர் நூர்முகம்மது நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.