Monday, January 23, 2012

கீழக்கரை கல்லூரியில் பல் வேறு மாநிலங்களிலிருந்து குவிந்த மாணவர்கள் !



நிகழ்ச்சியில் அமைச்சர் சுந்தர்ராஜன்,மாவட்ட கலெக்டர் அருண் ராய்,சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ்,நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.
இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா சார்பாக தேசிய ஒருமைபாட்டு முகாம் முகம்மது பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் தலைமையில் தொடங்கியது.

இதில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் துவக்கி வைத்து பேசினார். இம்முகாமில் முகம்மது சதக் கல்லூரி நிர்வாகிகள் பாலிடெக்னி கல்லூரி முதல்வர் அலாவுதீன் ,முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர்,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தர பாண்டியன், மற்றும் குஜராத், மகாராஷ்டிரா ,உத்தர பிரேதேசம்,ஆந்திரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 100 இளைஞர்களும்,தமிழ்நாட்டு மாணவர்கள் 50 பேரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராபர்ட் ஜேம்ஸ் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சேவைகள் செய்த மூன்று இளைஞர்களுக்கு அமைச்சர் மற்று மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினர் செய்யாதீர்கள்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.