Sunday, January 8, 2012

விபத்து பகுதியில் ஒளிரும் பிளாஸ்டிக் விளக்குகளை உடைக்கும் விஷமிகள் !





உடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகள‌

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே வளைவில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதனையடுத்து அரசு சார்பில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக‌ வளைவுகளில் ஏராளமான‌ கற்கள் பதித்து இரவு நேரங்களில் ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை பொருத்தியிருந்தார்கள். இதன் மூலம் ஒளிரும் விளக்குகள் இரவு நேரம் வாகன ஒட்டிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது .


இந்நிலையில் விஷமிகள் சிலர் கற்களில் பதிக்கப்பட்டிருந்த ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை உடைத்துள்ளனர். விபத்தை தவிர்க்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகளை உடைத்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.