Wednesday, January 11, 2012

கீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்களுக்கு பரிசு !






கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்கம்,கீழக்கரை ரோட்டரி சங்கம்,மக்கள் சேவை அறக்கட்டளை,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்திய 23வது சாலை பாதுகாப்பு வார விழா முகம்மது பாலிடெக்னிக் கல்லூரி கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது.முன்னாள் கவுன்சிலர் ஜஹாங்கிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் விபத்துக்கள் இல்லாமலும்,விதிமுறைகளை மீறாமலும் ஆட்டோ ஓட்டிய 6 ஓட்டுநர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன்,நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ,அறக்கட்டளை நிறுவனர் உமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


இது குறித்து ஓட்டுநர் காதர் கூறியதாவது,


ஓட்டுநர்களுக்கு பரிசளித்து பாராட்டுவது பாராட்டுக்குறியது.அடுத்த முறை என்னென்ன தகுதிகள் அடிப்படையில் இந்த பரிசுகள் வழங்கப்படுகிறது என்பதை அனைத்து ஓட்டுநர்களுக்கும் தெரியப்படுத்தினால் அவர்களும் பரிசுக்கான தகுதிகளை வளர்த்து கொள்வதற்கு ஊக்கமளிக்கும் என்றார்,

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.