Saturday, July 27, 2013

கீழக்கரை கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்!ரூ5200 அபராதம்!






கீழக்கரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் சில கடைகளில் அரசால் தடை  செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருள்கள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
 
நகராட்சி ஆணையர் முஹம்மது அயூப்கான்
 
 
 இதன் அடிப்படையில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் முஹம்மது அயூப்கான் ஆகியோரது உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், மோகன், கருணாநிதி, செல்லகண்ணு ஆகியோர், கீழக்கரையில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

 இதில் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 5,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.   ஆய்வின்போது, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீஸாரும்  உடன் சென்றனர்.

3 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 27, 2013 at 7:26 PM

    மிக்க மகிழ்ச்சி. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு எதிராக புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தமைக்கு மனம் கனிந்த பாராட்டுகள்

    அதே நேரத்தில் குப்பைகரையின் புகழ் பாடிக் கொண்டிருக்கும் வீதியெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பை, மூடப்படாத வாருகால், கங்கை நதியை போல வழிந்தோடும் கழிவு நீர், எரியாத ஹைமாஸ் விளக்குகள்,பாண்டி ஆட்டம் ஆட வைக்கும் நகரின் முக்கிய வீதிகள் - இவைகளைப் பற்றிய புகார் ஒன்றுமே தங்களின் காதுக்கு எட்டவே இல்லையா? பார்வைக்கு வரவே இல்லையா?

    மவுனத்தை களையுங்கள். வாங்குகிற சம்பளத்திற்கு நீதமாக செயல் பட முயற்சிங்கள். செய்கின்ற செயலுக்கு கேள்வி கேட்கக் கூடிய மறுமை நாள் என்று ஒன்று உண்டு என்பதை திண்ணமாக மனதில் கொள்ளுங்கள்.அந் நாளில் கடமையை காவு கொடுத்து விட்டு சாப்பிட்ட பொரித்த சீலா மீன் துண்டும், தம் பிரியாணியும் லோதலும் காப்பாற்ற வராது என்பதும் திண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. பொரித்த சீலா மீன் துண்டும், தம் பிரியாணியும் லோதலும்.....

      ஓ.... இதுவேறயா? அடங்கொய்யால......இதோட நல்ல (பொரித்த) வெடக் கோழியும் பரிமாறுவாங்கலோ.......

      Delete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 27, 2013 at 7:42 PM

    தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்ய துணை போகும் காவல் துறையே, ஊறே காறித் துப்பும் நிலையில் லஞ்ச லாவண்ணியத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நகராட்சி நிர்வாகத்தை தட்டிக் கேட்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா? பாதிப்புக்கு உள்ளாகும் பொது மக்களை தாக்கத்தான் உங்கள் லத்திகளை சுழற்றுவீர்களோ?

    இன்று த.மு.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. போன்ற அரசியல் அமைப்புகளும் பொது மக்களுக்காக களம் காணத் தொடக்கி விட்டன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.