Friday, March 15, 2013

ரெயில்வே பட்ஜெட்டில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் புற‌க்க‌ணிப்பு! கண்டித்து வர்த்த‌க‌ ச‌ங்க‌ம் ஆர்ப்பாட்ட‌ம்!

photo :thanks ,Dinathanthi

ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்தும்,

 சென்னை&ராமேஸ்வரத்திற்கு மதுரை வழியாக பகல் நேர கூடுதல் ரயில் சேவை. மதுரை&ராமேஸ்வரம் பகல் நேர கூடுதல் ரயில் சேவை, முன்பிருந்ததுபோல் கோவை&ராமேஸ்வரம் தினசரி ரயில் சேவை, நாகூர்&வேளாங்கண்ணி& மயிலாடுதுறை& மானா மதுரை &ராமேஸ்வரம் தினசரி ரயில் சேவை, மைசூர்&ராமேஸ்வரம், பாலக் காடு&ராமேஸ்வரம், பழனி& ராமேஸ்வரம் ரயில் சேவைகள் வழங்குதல், குர்லா& மதுரை, டெல்லி& மதுரை, கவுரா& திருச்சிராப்பள்ளி, சென்னை& திருச்சி & காரைக்குடி (பல்லவன் எக்ஸ்பிரஸ்), கொல்லம்& மதுரை, தென்காசி&மதுரை ஆகிய ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.

மேலும் மக்களின் குழப்பத்தை போக்க ராமேஸ்வரம் & சென்னை (16713&1 6714) எக்ஸ்பிரஸ் ரயிலை சேது எக்ஸ்பிரஸ் எனவும், 16701&16702 எக்ஸ்பிரஸ் ரயிலை போட் மெயில் எனவும் பயணச்சீட்டில் குறிப்பிட வேண்டும், அதிக மக்கள் தொகையுடைய உச்சிப்புளி, மண்டபம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.

ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர‌வும், காரைக்குடி& தொண்டி & ராமநாதபுரம் & கீழக்கரை& ஏர்வாடி& சாயல்குடி& தூத்துக்குடி& திருச்செந்தூர்& வ‌ழியாக‌ கன்னியாகுமரி வ‌ரை புதிய‌ அகல ரயில்பாதை ஆய்வுப்பணிகள் முடிந்துவிட்டதால், இத்திட்டத்திற்கு ரயில்வே துணை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசப்பட்டது

ஆர்ப்பாட்டத்துக்கு வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நகரசபை தலைவர்(பொ) கவிதா சசிக்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் ரவிச்சந்திர ராம வன்னி, தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
இதில் வர்த் தக சங்க செயலாளர் குப்தா கோவிந்தராஜன், பொருளா ளர் செல்வராஜ்,துணை தலை வர்கள் குருசாமி, காஜா மைதீன், வாசுதேவன், காதர், இணை செயலாளர்கள் மனோகரன், கருணாநிதி, ராஜாராம் பாண்டியன், முத்துராமலிங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் துரை கண்ணன், அல்லா பிச்சை, வக்கீல் சோம சுந்தரம், கண்ணன்பாபு உள் பட பலர் கலந்து கொண்ட னர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரெயில்வே துணை பட்ஜெட்டில் ராமநா தபுரம் மாவட்டத்துக்கு முக் கியத்துவம் அளிக்க வலியு றுத்தி கோஷங்களை எழுப்பி னர்.
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்March 15, 2013 at 5:21 PM

    பொது அமைப்பான இராமநாதபுரம் வர்த்தகம் ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு கூட தொகுதி நாடாளூமன்ற மக்கள் பிரதிநிதி தந்து பங்களிப்பை உறுதி செய்யாததின் கொடுமையை என்ன வென்று சொல்லுவது?

    அடுத்த வருடம் வர இருக்கும் பாராளூமன்ற தேர்தலில் அவர் சார்ந்த கட்சியின் வேட்பாளருக்கு மக்கள் சாட்டை அடி கொடுக்க தயாராகவே உள்ளனர். இப்படி பட்டவர்களை முழுமையான காலத்திற்கு பதவி சுகம் அனுபவிக்க அனுமதிக்கும் இந்திய ஜனநாயாகமே நீ வாழ்க மக்கள் துயர் தொடரட்டும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.