Monday, March 18, 2013

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் ஏரோ எலைட் 13 நிகழ்ச்சி


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வானூர்தி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவிலான ‘ஏரோ எலைட் 13’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் எம்.பி.ஏ. கூட்டரங்கில் நடந்தது.

கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார், இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா, இந்திய விமானப்படை முன்னாள் கமாண்டர் ஐ.சர்புதீன் முன்னிலை வகித்தனர். வானூர்தி பொறியியல் துறைத்தலைவர் ரஷீத்கான் வரவேற்றார்.

விழாவில் இந்திய விமானப்படை முன்னாள் கமாண்டர் ஐ.சர்புதீன் பேசுகையில், ‘வருங்கால விமானத்துறை முன்னேற் றம் குறித்தும், தற்போதைய விமானத்துறையில் உள்ள விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்குவது மற்றும் செலவினங்களை குறைப் பது குறித்தும் விரிவாக மாணவர்களுக்கு விளக்கினார். இதில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

துறைத்தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் மற்றும் துறைத்தலைவர்கள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.