Wednesday, March 13, 2013

கீழக்கரையில் மார்ச் 16ல் வேலைவாய்ப்பு முகாம்!


பைல்(ப‌ழைய‌)ப‌ட‌ம்

கீழக்கரையில் மார்ச் 16ல் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

வேலைவாய்ப்புத்துறை சார்பில் தனியார் துறை மூலம் மார்ச் 16ல் கீழக்கரை முகம்மது சதக்பொறியியல்துறை கல் லு�ரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் மா லை 5 மணிவரை நடைபெ றும் முகாமில், தொழில்திறன் தகுதி உடையவர்கள், பொறியியல் பட்டதாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. முடி த்த பட்டதாரிகள், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்கள் பங்கேற்கலாம்.

சென்னை, திருச்சி, கோ வை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள வேலைவாய்ப்பு அளிப்போர் முகா மில் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்கின்றனர். தேர்வுபெறுவோரின் பதிவு எண் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ரத்து செய்யப்படமாட்டாது.

வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் தங்களது கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவைகளுடம் நேரில் பங்கேற்று பயனடையலாம் என அவர் தெரிவித்துள் ளார். ஏற்பாடுகளை மதுரை மண்டல வேலைவாய்ப்பு துணை இயக்குனர் பிச்சம்மாஆறுமுகம், உதவி இயக்குனர். சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.