Saturday, March 30, 2013

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் பழ‌மையான‌ ந‌ங்கூர‌ம் க‌ண்டெடுப்பு!

கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதியில் மீன் பிடிக்க‌ வ‌லையை வீசிய‌ போது ப‌ழ‌மையான‌ ந‌ங்கூர‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

இது குறித்து ப‌ட‌குக‌ளை நிர்வாகிக்கும் கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பாக்க‌ர் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதியில் இருந்து 20 கிலோ மீட்ட‌ர் தொலைவில் மீன் பிடித்த‌ போது மிகவும் க‌ன‌மான‌ பொருள் சிக்கியது.மிக‌வும் சிர‌ம‌ப்பட்டு இழுத்து வெளியே எடுத்த‌ போது சுமார்‌1ட‌ன்னுக்கு மேல் க‌ன‌முள்ள‌ ந‌ங்கூர‌ம் என‌ தெரிய‌ வ‌ந்த‌து.வ‌லையில் சிக்கிய‌தால் ரூ 1 ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ வலை சேத‌ம‌டைந்த‌து.இந்த‌ ந‌ங்கூர‌ம் சுமார் 50 ஆண்டுக‌ளுக்கு முந்தையதாக‌ இருக்க‌லாம் என்றார்.

க‌ட‌ற்க‌ரை புதிய‌ ஜெட்டி பால‌த்தின் அருகில் உள்ள‌ ந‌ங்கூர‌த்தை  காண்ப‌த‌ற்கு ஏராள‌மானோர் க‌ட‌ற்க‌ரையில் குவிந்த‌ன‌ர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.