Saturday, March 16, 2013

தபால்காரருக்கு கொலை மிரட்டல்!கீழ‌க்க‌ரை அதிமுக‌ பிர‌முக‌ர் மீது வ‌ழ‌க்கு!

கீழக்கரையில் தபால்காரரை வேலை செய்யவிடாமல் தடுத்து முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக‌ அதிமுக நகர் துணைச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிக்கல் வடக்குத் தெருவை சேர்ந்த குருசாமி மகன் உடையான்(45). இவர் கீழக்கரை தபால் நிலையத்தில் தபால் பட்டுவாடா செய்பவராக பணியாற்றி வருகிறார்.

 நேற்று முன்தினம் தட்டான்தோப்பு பகுதியில் ஆதார் அடையாள அட்டை பட்டுவாடா செய்து
கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக நகர் துணைச் செயலாளர் குமரன், தன்னுடைய அட்டையை முதலில் தரவேண்டும் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமரன், உடையானை தரக்குறைவாக பேசி முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக‌  உடையான் கொடுத்த புகாரின்பேரில் கீழக்கரை எஸ்ஐ கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து குமரனை தேடிவருகிறார்.







 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.