Saturday, January 14, 2012

சீலா மீன் விற்பனையில் முஜீப் குற்றச்சாட்டில் உண்மையில்லை ! மீனவர் சங்க தலைவர் பேட்டி !



கீழக்கரையில் மலிவு விலைக்கு ஆந்திர சீலா மீன்களை வாங்கி அதிக லாபம் வைத்து விற்பதாகவும் ,எடையில் முறைகேடு நடப்பதாகவும் தமுமுகவின் முன்னாள் மாவட்ட பொருளாளர் முஜீப் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து சிறுதொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் கூறுகையில் ,

ஆந்திர பகுதியில் பிடிபடும் சீல மீன்கள் ஐஸ்சில் வைத்து பதப்படுத்தப்பட்டு விற்பதால் ருசி குறைவாகவும் உள்ளூர் மீன்கள் ஐஸ்சில் வைக்காமல் விற்பதால் ருசியாக உள்ளது .மற்றப்படி இரண்டுமே சீலா மீன்கள்தான் .மலிவு விலையில் ஆந்திர சீலா மீன் என்றெல்லாம் முஜீப் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மேலும் எடையில் முறைகேடு இருந்தால் மீனவர் சங்கத்தில் புகார் செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கீழக்கரை மீன்கடை தெருவை சேர்ந்த சுல்தான் கூறுகையில் ,
முஜீப் ஆந்திர சீல மீன் கிலோ 90க்கு கிடைக்கும் என்று தவறான தகவலை கொடுத்துள்ளார். ஆந்திரா சீலா மீன்கள் கிலோ ரூ 300 லிருந்து ரூ350 வரைக்கும் மொத்த மார்கெட்டில் விற்கபடுகிறது.உள்ளூர் வியாபாரிகள் அங்கிருந்து வாங்கி பதப்படுத்தும் செலவு,வாகனங்களி ஏற்றி வரும் செலவு மற்றும் இதர செலவுகளை செய்து அதற்கேற்றார் போல் நியாயமான லாபம் வைத்து தான் விற்பனை செய்கிறார்கள்.
எனவே முஜீப் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

5 comments:

  1. mr.mujeeb ungalukku vera vela illaya

    ReplyDelete
  2. avarukku vera vela illa pola chumma ethavathu sollitu irupparu

    ReplyDelete
  3. I NEED 1 (ONE) TON OF SHEELA FISH ASK MUJEEB TO SUPPLY IMMDLY @ 90/- OR 100/- PER KG

    ReplyDelete
  4. ask mujeeb to supply 3 tonnes of sheela fish for me. i pay him the same rate what he says

    it's very urgent

    ReplyDelete
  5. this message is for editior


    before publishing these type of news first you should check it's true or not

    even you have told there is a different in kgs

    if such news are there u can compliant to the fisher's man association and prove it,
    they will take action against them

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.