Saturday, January 28, 2012

கீழ‌க்கரையில் திருட‌ப்ப‌ட்ட‌ ந‌கைக‌ள் மீட்பு !(ப‌ட‌ங்க‌ள்)








கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ சேக் அலாவுதீன் ம‌ற்றும் ந‌சுருதீன்
வெளிநாட்டிலிருந்து திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான கீழக்கரை வந்திருந்த மேலத்தெருவை சேர்ந்த‌ தொழில் அதிபர் முகம்மது அலி(30) என்பவர் வீட்டில் கடந்த ஜனவரி 3ம்தேதி(2012) கைபையில் வைத்திருந்த லட்சக்கணக்கணக்கில் மதிப்புள்ள‌ நகைகள் கொள்ளைய‌டிக்கப்பட்டன. இது தொடர்பாக எஸ்.பி காளிராஜன் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,எஸ்.ஐ கனேசன் மற்றும் டிஎஸ்பி முனியப்பன் தலைமையில் காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக‌‌ ஏர்வாடியை சேர்ந்த சிக்கந்தர் மகன் நசுருதீன் ,மாயாகுளம் பள்ளி வாசல் தெரு ஹாஜா நஜிமுதீன் மகன் சேக் அலாவுதீன்(25)ஆகியோரை போலீசார் கைது செய்த‌ன‌ர்.

இது குறித்து காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன் கூறுகையில் ,

பொதும‌க்க‌ளின் அஜாக்கிர‌தை திருடர்க‌ளுக்கு சாத‌க‌மாகிற‌து.விலை உய‌ர்ந்த‌ ந‌கைக‌ளை பாதுகாப்புட‌ன் வைத்து கொள்ள‌ வேண்டும் என்றார்.

1 comment:

  1. Kandipa porutkalai paadhukaaka vendiyadhu nam kadamai than..,police sir solradhu unmai than..,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.