Sunday, April 7, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவர் உயிர‌ழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் !பேராசிரிய‌ர் கைது!






கீழ‌க்க‌ரை தனியார் கல்லூரி மாடியில் இருந்து, மாணவர் விழுந்து இறந்த வழக்கில், ஆங்கில துறை தலைவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேலப்புதுக்குடி சீனி அப்துல் மஜிது மகன் சமீமுதீன், 24. கீழக்கரை தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

 நேற்று முன்தினம் மதியம், 2:40 மணிக்கு மாணவர், கல்லூரி மாடியில் இருந்து விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.த‌ற்கொலை செய்து கொண்ட‌தாக‌ த‌க‌வ‌ல் வெளியான‌ நிலையில் இது குறித்து மாண‌வ‌ரின் உற‌வின‌ர் ந‌சீர் ஹுசைன் கொடுத்த‌ புகாரில்... மாணவருக்கும், ஆங்கில துறை தலைவர் டேனியல் நெல்சனுக்கும், முன் விரோதம் இருந்ததாகவும் இது கொலை என‌வும் இத‌ற்கு கார‌ண‌ம் டேனிய‌ல் நெல்ச‌ன் தான் என்‌ற‌ புகாரின் பேரில் டேனியல் நெல்சனை கீழக்கரை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.






1 comment:

  1. assalamu alaikum brother
    nega anupura veceyam yallam yangala madure valenaatula ierukeravagaluku ramba usefulaa ieruku
    thanks

    manavan kolai valakula solla padura aacereyar nallavar
    manavargal yanda oru avaraanu mudeu yadutaalum aaduku aacereyargala kurai solvadu tappu
    na anda collagela b.sc it padecaan
    nalla aacereyargal nalla princepal nalla management
    ieradavan vandu sace sola porrana yandru matvaga solra poi iedu
    alluku tareyum yaru tavaru paneierupaanu
    so please help ienda message pass panuga
    yalarum taregekeraatum

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.