Monday, July 15, 2013

கீழக்கரையில் பட்டாசுகள் சிதறி பயங்கர தீ விபத்து! ஒருவர் கைது!



காயமடைந்த ஒருவர்



கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் உள்ள கோல்டன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்  தனியார் கட்டிடத்தில்  பட்டாசுகள் வைக்க்கப்பட்டிருந்த கடையில் இன்று இரவு தீ  விபத்து ஏற்பட்டது.
பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இக்கட்டிடத்தில் வாடகைக்கு கடை எடுத்து குடோனாக பயன்படுத்தி பட்டாசுகளை சட்ட விதிகளுக்கு முரணாக பதுக்கி வைத்திருந்ததாக செல்வராஜ் என்பவரை  கீழக்கரை போலீசார் கைது செய்தனர்

புத்தக கடை வைப்பதாக  கடை எடுத்து பட்டாசு வைத்திருந்தாதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர்.
அப்பகுதியியை சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தீயை அணைக்க உதவினர்.

ஒரு சிலருக்கு சிறிய அளவில் காயத்தோடு பெரிய அளவில் யாருக்கும் எவ்வித பாதிப்பு  ஏற்படவில்லை இது குறித்து பொதுமக்கள் நிம்மதி தெரிவித்தனர்
மேலும் தீ விபத்து பரவாமல் தடுக்கபட்டது

கட்டிடத்தில் உள்ள மேலும் சில கடைகள் தீ விபத்தில் பலத்த சேதமடைந்துள்ளன

2 comments:

  1. மங்காத்தாவின் தஙகச்சி மகன்July 15, 2013 at 10:18 PM

    சட்டத்தை காலில் போட்டு மிதிக்க முயற்சித்த்தால் வந்த வினை. வேறு என்னத்தை சொல்ல?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.