Wednesday, September 11, 2013

இராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயில்' அறிமுகம் !



தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்பட்ட 5 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில் முக்கியமாக கோவையிலிருந்து திருச்சி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இடம் பெற்றிருந்தது.

அதன் படி கோவை - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப் டுகிறது. இச்சேவை வரும், 17.09.2013 அன்று கோவையில் துவங்குகிறது. கோவையிலிருந்து 17ம் தேதி இரவு, 7:45 மணிக்கு புறப்படும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16618), திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக மறுநாள் காலை, 06.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

இதேபோன்று, 18ம் தேதி இரவு, 07.00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 16617), அதே வழித்தடத்தில் மறுநாள் காலை 6:40 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் சேவை, வாரந்தோறும் கோவையிலிருந்து செவ்வாய் கிழமையும், ராமேஸ்வரத்திலிருந்து புதன் கிழமையும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவுகள் துவங்கி விட்டன. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படம் மற்றும் செய்தி : சாலிஹ் ஹுசைன்(கீழை இளையவன்)

1 comment:

  1. ராமேஸ்வரம் இருந்து கோவைக்கு ரயில் விடப்பட்டது, ராமநாதபுரம் மாவடத்தை சேர்த்த மக்கள் வணிகர்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும் , இதற்கு மக்களின் சார்பாக அரசுக்கு நன்றி தெர்வித்து கொள்கிறோம் ,வாரத்திற்கு ஊரு முறை என்பது மிக குறைவான ரயில் போக்குவரத்துக்கு ஆகும் , வத்திற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் ரயில் இயக்க வேண்டும் , டூர் செல்லும் மக்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்,
    கீழக்கரைல் மக்களுக்கு ரயில் வசதி என்பது இல்லை , கீழக்கரைல் ரயில்வே அமைப்பது மக்களின் நீட்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகிறது இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் , ராமநாதபுரம் இருந்து கீழக்கரை வழியாக துத்துக்குடி வரைம ரயில் போக்குவரத்துக்கு வசதி இல்லை , கீழக்கரைல் ரயில்வே அமைப்பதற்கு மக்கள் ஒன்று கூடி மக்கள் நலன் நாடும் அமைப்புகளும் ஒன்று கூடி அரசுக்கு குரல் கொடுக்க வேண்டும் ,கீழக்கரைல் ரயில்வே அமைந்தால் கீழக்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம்களும் தொழில் வளர்ச்சி பெரும் , மக்களின் பொருளாதாரமும் உயரும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.