Monday, October 3, 2011

துபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேரவை நவ 10ல் உதயம்





கீழக்கரை தாசிம் அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் பேரவை வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது துபாயில் உள்ள தாசிம் பீவி கல்லூரியின் முன்னாள் மாணவியர்களையும் இணைத்து செயல்பட துபாயில் எதிர்வரும் நவம்பர் 10ந்தேதி மாலை இடிஏ அஸ்கான் 'டி' பிளாக்கில்(லூலு சென்டர் பின்புறம், தேய்ரா) "முன்னாள் மாணவியர் பேரவை - துபாய் பிரிவு" துவக்கப்பட உள்ளது.இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் டாக்டர் ரஹ்மத்நிஷா கலந்து கொண்டு முன்னாள் மாணவியர் பேரவையை(துபாய்) துவக்கி வைக்க உள்ளார்.

இது குறித்து கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் வெளியிட்டுள்ள செய்தியில்,

முன்னாள் மாணவியர் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு முன்னாள் மாணவியர் பேரவையின்(துபாய்) துவக்க விழாவை நமது கல்லூரி வரலாற்றில் சிறப்புமிக்கதாக்கி தர‌ வேண்டும் மேலும் இவ்விழாவில் அமீரகத்தில் உள்ள முன்னாள் மாணவிகள் அனைவரும் வருகை தந்து விரைவில் நடைபெற உள்ள கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும்,கல்லூரின் வளர்ச்சி பற்றிய உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என‌ கேட்டு கொள்கிறோம் என துவக்க விழாவில் கலந்து கொள்ள முன்னாள் மாணவியருக்கு அழைப்பு விடுத்துள்ளார்

1 comment:

  1. vision of kilakarai 2020October 3, 2011 at 7:15 PM

    உங்களின் இந்த சிறப்பான சேவை தொடர எங்களின் இதய பூர்வமான நல்வாழ்ததுகள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.