Sunday, October 9, 2011

கும்பிடுமதுரையில் கைராத்துல் ஜலாலியா பள்ளி சார்பில் நலப்பணிகள் !



கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா கும்பிடுமதுரை கிராமத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சையது அபுதாகிர் அனைவரையும் வரவேற்றார். 7 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் சாலை சீரமைப்பு,தொடக்கப்பள்ளி வளாகம் தூய்மை,மரக்கன்று நடுதல்,108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு செயல்முறை விளக்கம்,எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற செய்ல்பாடுகள் நடைபெற்று வருகிறது
இம்முகாமில் தலைமை ஆசிரியர் முகம்மது மீரா,தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இப்ராகிம்,ஜமாத் துணை
தலைவர் முகைதீன் அப்துல் காதர்,கல்விக்குழு உறுப்பினர் சுஐபு,கும்பிடுமதுரை ஜமாத் தலைவர் முர்சலின், அக்பர் உள்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.