Thursday, October 13, 2011

கிழக்கரையில் உட்கட்சி பூசல் ! மந்தகதியில் காங்கிரஸ் பிரச்சாரம்


ஆயிசத்துல் முபஸ்ஸரா

நகர் காங் தலைவர் ஹமீதுகான்

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக காங் சார்பில் ஆயிசத்துல் முபஸ்ஸராவை நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளரான நகர் காங் தலைவர் ஹமீது கான் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் பிரச்சாரத்தில் ஈடுபாடு இல்லாமல் உள்ளனர்.ஹமீது நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவராக உள்ளார்.இவரிடம் பிரச்சாரம் குறித்த எந்த ஒருஆலோசனையையும் வேட்பாளர் பெற வில்லையாம் இதனால் இவர் தரப்பில் யாரும் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கீழக்கரையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி ராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய அளவிலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் கூறுகையில்... கீழக்கரை நகராட்சி தலைவருக்கு போட்டியிடும் காங் வேட்பாளர் தரப்பில் யாரும் என்னை பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை அதனால் அவருக்கு ஆதரவாக நான் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்றார்.

நகர் காங் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்....,கீழக்கரை நகராட்சி தலைவருக்கு போட்டியிடும் காங் வேட்பாளர் தரப்பில் யாரும் எங்களை தேர்தல் பணிக்கு அழைக்கவில்லை.மேலும் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையே இல்லாத சிலர் காங்கிரஸ் போர்வையில் கட்சியில் புகுந்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

கீழக்கரையில் சுயேட்சை வேட்பாளர்கள் வரை பிரச்சாரத்தில் தூள் கிளப்பி வரும் நிலையில் பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரஸ் பிரச்சாரத்தில் பின் தங்குவது குறித்து அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.