Sunday, October 23, 2011

இஸ்லாமியா பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி சேவை !



எழுத்து பயிற்சி பெற்றவர்களின் பெயர்,முகவரியை வெளியிடுவது நாகரீகமாக இருக்காது என்பதினால் அவர்களின் பெயர்,முகவரி அழிக்கப்பட்டுள்ளது


இஸ்லாமியா பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தமிழில் எழுத கற்று கொள்ளாமல் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எழுத்து‌ பயிற்சி அளித்தார்கள்.பத்து நாட்களுக்கு மேல் தினமும் அரை மணி நேரம் வீதம் கையெழுத்து பயிற்சி அளித்து மனித குலத்துக்கு தேவையான சேவையாற்றியதை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.இந்த‌ ப‌யிற்சியின் மூல‌ம் 30க்கும் மேற்ப‌ட்டோர் ப‌ய‌ன்பெற்ற‌ன‌ர்.

க‌ல்வி சேவை செய்த‌ மாண‌வ‌ர்க‌ள் விப‌ர‌ம்,அஜீத்,அருண்குமார்.பென‌ட் ரூப‌ன்,தினேஷ்குமார்,தீப‌க் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி,கோபி க‌ண்ண‌ன், ஹாமித் வ‌ஜாக‌த்,முக‌ம்ம‌து இஸ்ஹாக்,முக‌ம்ம‌து ம‌ணாஸ்,முக‌ம்ம‌து சுஹைல் ,முகம்ம‌து ஹ‌ச‌ன்,நாகேந்திர‌ன்,நெய்னா,ர‌குமான் பாரிஸ்,ரோகேஷ் லிங்க‌ம், சேக் ஜ‌லாலுதீன்,ச‌ஹீல் அப்துல்லா, பிர‌தீப் ஆகிய‌ 19 மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ கையெழுத்து ப‌யிற்சி சேவையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
இது குறித்து சமூக நல ஆர்வலர் குத்ப்தீன் ராஜா கூறிய‌தாவ‌து, இந்த மாணவர்கள் பாராட்டுக்குறியவர்கள் மேலும் ந‌ம்மால் முடிந்த‌ வ‌ரை இது போன்ற‌ சேவையில் ஈடுப‌ட்டால் முழுமையான‌ க‌ல்விய‌றிவு பெற்று நம் நாடு திக‌ழும் என்றார்

3 comments:

  1. manavargalai paratren.ithu mariyana pulyaivolai nama support pannanum.kadalosaiku nanri

    ReplyDelete
  2. painvolte padichavana peryai alichatu potathu nallathu .palli pulavalvo seythi naraya podunga

    ReplyDelete
  3. painvolte padichavana peryai alichatu potathu nallathu .palli pulavalvo seythi naraya podunga

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.