Friday, October 7, 2011

மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் அப்துல் வஹாப் வாக்கு சேகரிப்பு


ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் 17 கவுன்சிலர் இடங்களுக்கு 85 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகள் உள்ளன. வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என 85 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி தேர்தலில் 1 முதல் 9 வார்டு வரை 17ம் தேதியும். 10 முதல் 17வது வார்டுகளுக்கு 19ம் தேதியும் வாக்குபதிவு நடைபெறவுள்ளது.
பட விளக்கம்: -7வது வார்டுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு எஸ்டிபிஐ வேட்பாளர் அப்துல் வஹாப் பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.