Tuesday, October 11, 2011

தொடரும் உயிர்பலி ! தூங்கும் மின் இலாகா


கீழக்கரை, அக்.
சூறைக்காற்றின் வேகம் தாங்காமல் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த முதியவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்புல்லாணி அருகேயுள்ள ரகுநாதபுரம், முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (70) இப்பகுதியில் இவருக்குத் தோட்டம் உள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை இங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றின் வேகம் தாங்காமல், தோட்டத்தில் இருந்த மின் வயர் அறுந்து விழுந்தது.
இதுதெரியாமல், நேற்றுக்காலை தோட்டத்துக்குச் சென்ற முகமது இப்ராகிம், எதிர்பாராதவிதமாக மின் கம்பியை மிதித்தார். அடுத்த வினாடி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோ வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இப்பகுதியில் அடிக்கடி இது போன்ற உயிரழப்புகள் ஏற்படுகிறது. மின் கம்பிகளை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.மின் இலாகா விழித்து கொள்ளுமா ....

1 comment:

  1. e.b. karanunga yaravathu karant adichu setha udane repair seivannungall..................

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.