Friday, October 14, 2011

கீழக்கரை பகுதியில் வாகன சோதனையால் வியாபாரிகள் அவதி !



உள்ளாட்சி தேர்தலையோட்டி தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கீழக்கரையில் தேர்தல் நன்னடத்தை விதிகள்,வேட்பாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க கண்காணிப்பாளர் மணி தலைமையில் போலீசார்கள் இளங்கோவன்,ராஜேஸ்வரன் மற்று போட்டோகிராபர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடு மற்றும் கீழக்கரையில் உள்ள முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாகன சோதனைகளால் பெரும் அவதிக்குள்ளாகும் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு பணம் எடுத்து வருவதை குறைத்து விட்டனர் இதனால் தேங்காய்,அரிசி போன்றவை கொள்முதல் குறைந்து விட்டது.தேர்தல் முடிந்தால் இதற்கு விடிவு பிறக்கும் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.