Tuesday, October 11, 2011

ஏர்வாடியில் இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது !1.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது !

ஏர்வாடி கடற்கரை பகுதியில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்கள் கனேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேக படும் படி நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை சோதனை செய்த போது ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
மேற்கொண்டு விசாரணை செய்ததில் ஒருவர் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த நிக்லாஸ் மகன் சுதர்சன்(25),மற்றொருவர் முள்ளிவாய்க்காலை சேர்ந்த சிதம்பரம்பிள்ளை மகன் சாந்தகுமார்(54) என்பது தெரிய வந்தது. போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து கஞ்சவை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.