Wednesday, October 19, 2011

கீழக்கரையில் தரமற்ற சாலை!பொது மக்கள் எதிர்ப்பு



கீழக்கரை கிழக்குத்தெரு முகம்மது காசிம் அப்பா தர்ஹா அமைந்துள்ள பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது இதுவரை அமைக்கப்பட்ட சாலை தரமற்று உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் சாலைப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை நகராட்சி சார்பில் ஒப்பந்தக்காரர் பழனி என்பவர் மூலம் ரூபாய் 6.30 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.நேற்று காலை 10மணியளவில் நடந்து கொண்டிருக்கும் போது அப்பகுதி மக்கள் சாலை தரமற்று இருப்பதாக கூறி, சாலை பணிகளை நிறுத்துமாறு கூறினர்.இது குறித்து விசாரிக்க இப்பகுதிக்கு வந்த நகராட்சி அலுவலர் மணியிடம் மழை நீர் தேங்காத அளவில் தரமான வகையில் சாலையை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டனர். இதனையடுத்து சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.