Tuesday, October 11, 2011

தனிநபர் விமர்சனம் கூடாது வேட்பாளர்களுக்கு அட்வைஸ்

கீழக்கரை, அக்.

தேர்தலில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் கீழக்கரையில் நடந்தது.
திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை காவல்நிலையங்களில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் தேர்தல் விதிமுறை விளக்க கூட்டம் நடைபெற்றது. அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பேசுகையில், “வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் போது தனிபட்ட நபர்களை விமர்சனம் செய்யக்கூடாது. வீடுகளுக்கு கவர்களில் வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்க கூடாது. பொதுக் கூட்டம், மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கும், ஆட்டோ மற்றும் வாகனங்களில் பிளக்ஸ் விளம்பரம் செய்வதற்கு அனுமதி பெறவேண்டும்,” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.