Thursday, October 20, 2011

இருதலைமணியன் பிடிபட்டது !



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட இருதலைமணியன் பாம்பை வன இலாகவிடம் ஒப்படைத்தனர்.ஏர்வாடி குடியிருப்பு பகுதியில் காந்தாரிபிச்சை மகன் ஆள்பாண்டியின் வீட்டின் அருகே பாம்பு ஊர்ந்து சென்றது.அப்பகுதியில் நின்றிருந்த தமீம் அன்சாரி,சேக் அன்சாரி,ஷேக் ராஜா உசைன்,கரீம் ஆகியோர் பாம்பை கைப்பற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இத‌னைய‌டுத்து வ‌ன‌ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன்,வ‌ன‌க்காப்பாள‌ர் முத்து க‌ருங்க‌ன் ஆகியோர் பாம்பை பெற்று திருப்புல்லாணி காட்டு ப‌குதியில் விட்டு சென்ற‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.