Thursday, October 18, 2012

கீழ‌க்க‌ரை-ராம‌நாத‌புர‌ம் சாலையில் விப‌த்து! ச‌த‌க் க‌ல்லூரி விரிவுரையாள‌ர் உயிர‌ழ‌ந்தார்


ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சக்தியேந்திரன் (வயது 34). இவர் ச‌த‌க் பாலிடெக்னிக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (32). இவர் அங்குள்ள ச‌த‌க் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் பணிமுடிந்து கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.

ஆர்.எஸ்.மடை என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த வேன் அவர்கள் மீது மோதியது. இதில் சக்தியேந்திரன், ஜெயந்தி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள்  அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ப‌ல‌னின்றி ஜெய‌ந்தி உயிர‌ழ‌ந்தார். இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் பி-1 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
க‌ல்லூரி விரிவுரையாளர் ஜெய‌ந்தியின் ம‌றைவுக்கு க‌ல்லூரி நிர்வாக‌ம்,ஊழியர்க‌ள்,மாண‌வ‌ ,மாண‌விய‌ர்க‌ள் சார்பில் இர‌ங்க‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இவ‌ரின் ம‌றைவு பெரும் சோக‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 18, 2012 at 9:20 PM

    WE SHARE WITH HER FAMILY , STUDENTS, STAFFS & MANAGEMENT FOR THE SUDDEN DEMISE OF MRS. JAYANTHI SATHIYENDRAN. WE CONVEY OUR CONDOLENCE THROUGH KEELAKARAI TIMES

    ReplyDelete
  2. WE MISS YOU BADLY MAM..........

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.