Saturday, October 6, 2012

ச‌த‌க் க‌ல்லூரியில் ஹஜ்பயணம் வ‌ழிய‌னுப்பு நிக‌ழ்ச்சி!

கீழக்கரை முகமது சதக் கல்லூரிகளின் இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, அவரது துணைவியாருடன் இஸ்லாமியர்களின் கடமையான ஹஜ் பயணம் மேற்கொள்கின்றார்.  அவருக்கு முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசியர்கள் சார்பில் வழியனுப்பு நிக‌ழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார். துறைத்தலைவர்கள் கார்த்திகேயன், அழகியமீனாள், பீர்ஒலி, மயில்வேல்நாதன் மற்றும் ஏராளமான கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். உதவி பேராசிரியர் பிஸ்மில்லாகான் துஆ  ஓதினார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

கீழக்கரை முகமது சதக் கல்லூரிகளின் இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,
தா‌ங்க‌ளின் ஹ‌ஜ் க‌ட‌மை நிறைவேற‌ துஆ செய்யுமாறு அன்புட‌ன் கேட்டு கொள்கிறேன்  என்றார்

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 6, 2012 at 6:31 PM

    யா அல்லா அன்னவர்களின் ஹ்ஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஏற்றுக் கொள்வாயாகா ஆமீன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.