Saturday, October 20, 2012

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் க‌ணினி தொட‌ர்பான‌ தேசிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்!










ப‌ட‌ விள‌க்க‌ம்:பேராசிரியர் வினோத் குமார் திவாரிக்கு முத‌ல்வ‌ர் ஜகாப‌ர் நினைவு ப‌ரிசு வ‌ழ‌ங்கினார்

முகமது சதக் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவிலான இரண்டுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் மும்பை வெஜிலன்ட் மென்பொருள் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். கணினி பொறியியல் துறைத்தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். மும்பை பேராசிரியர் வினோத் குமார் திவாரி நம்முடைய தகவல்களை கணினியில் எப்படி பாதுகாத்து கொள்வது என்று விளக்கினார்.

கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் பேசுகையில், ‘கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்ற பழமொழியை முன்வைத்து இன்றய இணையதளத்தில் நடைபெறும் ஒழுக்க சீர்கேட்டை தடுப்பது எப்படி, தகவல்களை பாதுகாப்பது எப்படி என்று விளக்கி பேசினார். இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர், பேராசிரியர் சேக்யூசுப் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.